ஸ்ரீரங்கம் சயன சேவை


ஸ்ரீ ஆண்டாள் வீற்றிருக்க ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலை வைத்திருக்கும் சயன சேவை. இந்த சயன சேவை ஸ்ரீ ஆண்டாள் கோவில் திருவிழாக்களில் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பாக நடைபெறும் விழாவில் சயனோத்சவம் ஒன்று. பெருமாள் மற்றும் தாயாரை இரவு சயன அறைக்கு அழைத்துச் செல்லும் உற்சவம். பெரும்பாலான தலங்களிலும் உண்டு.

இது தடைப்பட்ட திருமணம், புத்திரப்பேறு, தம்பதியர் ஒற்றுமை என பலன்களைத் தரும் உற்சவம். ஸ்ரீரங்கம் கோயிலில் சயனம் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. ஸ்ரீரங்கநாச்சியார் சன்னதியில், நவராத்திரி மண்டபம் வடபுறத்தின் மேல் அமைந்துள்ள கஜலட்சுமி, அங்கே ஒரு வாசல் இருந்ததைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அந்த வாசல் 19ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டதாகச் சொல்வர். இந்த இடமே அரங்கனின் சயன மண்டபம். ஸ்ரீரங்கத்தில் அண்மையில் நடந்த குடமுழுக்கு வைபவத்தின் போது இந்த வாசல் கண்டறியப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.



Leave a Comment