மகா மாரியம்மன் கோயிலில் கடைவெள்ளி பெருவிழா


நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளி பெருவிழா ஆகஸ்டு 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மகா மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுப்பர்; சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பிற்பகலில் அன்னதானமும், மாலையில் சுமங்கலி திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. .
ஆகஸ்டு 12 ஆம் தேதி காலை 9 மணியளவில் பால்குடமும் மதியம் 12 மணியளவில் அபிஷேக ஆராதனையும் அன்னதானமும் மாலை 5 மணியளவில் சுமங்கலி திருவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. சிறப்பு நாகசுர இன்னிசையுடன் அன்றிரவு அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை நீடாமங்கலம் மகாமாரியம்மன் ஆலய நலச் சங்கத்தினர் மற்றும் நகரவாசிகள் செய்துள்ளனர்.



Leave a Comment