இறைவனை கைகூப்பி வணங்குவதன் காரணம்..!


இறைவனை வணங்கும்போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கம் வகையில் வணங்கக்கூடாது. தாமரை மொட்டு போல குவித்து வைத்தே வணங்க வேண்டும். விக்ரகத்தில் இருந்து ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அது பாம்பு வடிவத்தில் பக்தனை நோக்கி வருமாம். அவை பஞ்சபூத சக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேகமாகப் பரவும். அப்போது புத்துணர்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம்.

அதன்படி பூமி சக்தி சிறிய விரல் மூலமாகவும், தண்ணீர் சக்தி மோதிர விரல் மூலமாகவும், அக்னி சக்தி நடுவிரல் மூலமாகவும் வாயு சக்தி ஆட்காட்டி விரல் மூலமாகவும், ஆகாய சக்தி பெருவிரல் வழியாகவும் செல்லும் என்பது முன்னோர்கள் வாக்கு. ஆக இத்தகைய புத்துணர்ச்சியுடன்  செய்யப்படும் செயல்கள் யாவும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.



Leave a Comment