ஆன்ம நிலைகளை உணர்த்தும்...கோயில் கொடிமரம்!


திருக்கோயிலில் கொடிமரம் அமைப்பதன் காரணம் மனிதன் பலிபீடத்தின் முன் தன் இச்சைகளைப் பலிகொடுத்து தான் உடம்பும் அல்ல, தான் இச்சைகளும் அல்ல என்னும் உண்மையை உணர்கின்றான். பின்னர் பலிபீடத்தை அடுத்துள்ள கொடி மரத்தைக் காண்கிறான். அந்தக் கொடிமரம், அந்தரான்ம நிலையில் உள்ளவனுக்கு தத்துவான்ம நிலையை உணர்த்தும் சின்னமாக உள்ளது. பூதான்மா, அந்தரான்மா, தத்துவான்மா, ஆகிய மூன்று ஆன்மாக்களும் கொடி மரத்தின் உச்சியில் அடுத்தடுத்து அமைந்துள்ள மூன்று நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன அந்த மூன்று நிலைகளும், மூன்று ஆன்ம நிலைகளை உணர்த்துவதாகும்.

பூதான்மா நிலையில் உள்ளோர் மண், பொன், புகழ் போன்றவற்றை இழக்கத் துணிவர். அந்தரான்ம நிலையில் உள்ளோர் மண், பெண், பொன் ஆகிய மூன்றையும் விரும்புவர். ஆனால் அவற்றால் துன்பம் வரும் என்றால் அந்த ஆசையை அடக்கிக் கொள்வர். சமுதாயம் நன்மை, தீமை என்று வகுத்தவற்றை இயன்றவரை பின்பற்றுவர். தத்துவான்ம நிலையில் உள்ளோர் புகழையும், போற்றுதலையும் பெரிதும் விரும்புவர். தான தருமங்களில் ஈடுபடுவார்கள். பெண், பொன் ஆசைகளைக் கைவிடுவர். கொடி மரத்தால் உணர்த்தப்படுவது இத்தத்துவான்ம நிலையாகும்.



Leave a Comment