மாலை வேளையில்...உச்சரிக்க வேண்டிய நரசிம்மர் ஸ்லோகம்!


அணைத்து விதமான கஷ்டங்கள் விலக மாலை வேளையில் உச்சரிக்க வேண்டிய லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்

ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய நகாய ச 

மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும்நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.மேலும் வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை மனதார உச்சரிக்க வேண்டும். மேலும் இந்த பிரார்த்தனையின் போது அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.



Leave a Comment