விளக்குகளை இந்த நாட்களில் தேய்த்தால் ஏற்படும் தீமைகள்


தீபத்தினை வழிபடுவதற்கு என்று சில வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தெய்வீகமான குத்து விளக்கின் அடிப்பாகத்தில், ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப் பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில், ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் சொல்லப் படுகிறது.
விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்பெற வேண்டிய ஒன்று.
குத்து விளக்கில், அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்றும் போற்றப் படுவதால், குத்து விளக்கு, கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது.
விளக்கினை, உபயோகப்படுத்திய பின்னர், அதில் அழுக்கும், பிசுக்கும் ஏறி இருக்கும்.நான்கு நாட்களுக்குப் பிறகாவது சுத்தம் செய்ய வேண்டாமா? விளக்கினை தேய்த்து சுத்தம் செய்ய சில குறிப்பிட்ட நாட்களே உகந்தவை ஆகும்.
திங்கள் நடு ராத்திரி முதல் புதன் நடுராத்திரி வரை, குபேர தன தாட்சாயணி மற்றும் குககுரு தன தாட்சாயணியும் குடி கொண்டிருப்பதால், இந்த நாட்களில் குத்து விளக்கினைத் தேய்ப்பதால், இந்த சக்திகள் விலகி விடும். வெள்ளி அன்று தேய்த்தால் குபேர சங்கநித யட்சணி விலகி விடும்.

ஆகையால், ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில்தான் விளக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.

ஞாயிறு அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், கண் சம்பந்தப் பட்ட நோய்கள் அகலும். திங்கள் அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், மன சஞ்சலங்கள் நீங்கும்.வியாழன் அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், குரு கடாட்சம் கிட்டும். சனி அன்று சுத்தம் செய்து விளக்கினை ஏற்றினால், வாகன விபத்துக்களில் இருந்து விடுபடலாம்.



Leave a Comment