திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ 4.57 கோடி உண்டியல் காணிக்கை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை 83 ஆயிரத்து 964 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 32 ஆயிரத்து 340 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டவை இன்று எண்ணப்பட்டது. இதில் ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ 4.57 கோடியும் ரூ 5, 10, 20, 50 உள்ளிட்ட சில்லரை நோட்டுகள் மற்றும் நாணயங்கள் எண்ணப்பட்டதில் ரூ 5 கோடிக்கு ஒரே நாளில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த 2015 ஆண்டு ஒரே நாளில் ரூ 5.53 கோடி காணிக்கையாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருப்பதே அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment