சூரசம்ஹாரம் இல்லாத முருகன் தலம்....


முருகனின் அறுபடை வீடுகளுள் ஐந்தாம் வீடாக விளங்குவது திருத்தணி. இக்கோயிலின் சிறப்பம்சம் சரவணபொய்கை ஏரி. முருகன் கார்த்திகேயனாக அவதாரம் எடுத்ததும் இந்த ஏரியில்தான் என்ற வரலாறும் உண்டு.
ஆண்டுதோறும் முருகன் தலங்களில் கந்தசஷ்டி தினத்தன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெறும்.
ஆனால், முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் செய்யவதில்லை.
அன்றைய தினம் முருகனை குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படும். அப்போது 1000 கிலோ எடையுள்ள பூக்கள் பயன்படுத்தப்படும்.
இக்கோயிலில் சந்தனக்காப்புக்கு சாதாரண சந்தனம் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, இந்திரனே காணிக்கையாக செலுத்தியதாக கருதப்படும் சந்தனக்கல்லில் அரைக்கப்பட்ட சந்தனத்தால்தான் இங்கு சந்தனக்காப்பு செய்யப்படும்.



Leave a Comment