திருத்தணி முருகன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு...


திருத்தணி முருகன் கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும் இந்த திருக்கோயிலில் 2024 ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நள்ளிரவு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் அறங்காவலர்கள்- சுரேஷ் பாபு, நாகன், ஆகியோர்கள் மலர்மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவம் செய்தனர்

இதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகர் யோகி பாபு உடன் முருக பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கோரி மகிழ்ந்தனர். இந்த சிறப்பு நள்ளிரவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய மலைக்கோவிலில் குவிந்தனர் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்..



Leave a Comment