திருச்செந்தூரில் நவம்பர் 5 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, யாக சாலை பூஜையுடன் அக்டோபர் 31-ம் தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நவம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை)நடைபெறுகிறது.

இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது திருச்செந்தூர் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருச்செந்தூரில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 



Leave a Comment