சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தயார்


சபரிமலை நடை திறப்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை நதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சபரிமலைக்கு செல்லும் பெருவழி பாதை உள்பட 17 சாலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து உள்ளது.



Leave a Comment