மகரவிளக்கு மற்றும் மண்டல சீசன் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு...


இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றினார். மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும்.

41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும். டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும்.  அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.



Leave a Comment