நவராத்திரி பிரம்மோற்சவம்... ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் ஏழுமலையான் வீதி உலா


திருப்பதியில் நவராத்தி பிரம்மோற்சவத்தில் ஸ்ரீராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதியில் கடந்த 10-ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு கருட சேவை நடைபெற்றது. இதில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை தரிசிக்க 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.

விழாவின் ஆறாம் நாளில் அனுமன் வாகனத்தில் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் திரண்டுஇ ஆடல் பாடலுடன் ஏழுமலையானை வரவேற்றனர்.



Leave a Comment