திருப்பதி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல்


திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் முதல் நாளான அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி தனது தேவியர்களுடன் வீதி உலா வருகிறார். 11ஆம் தேதி காலை 9 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா. ஆதிஷேசன் விஷ்ணுவின் வாகனம் என்பதால் முதலில் சேஷ வாகனத்தில் வீதி உலா வருகிறார் பெருமாள்.

11ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் வீதி உலா வரும் மலையப்பசுவாமி, 12ஆம் தேதி காலை 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு முத்துப் பந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

13ஆம் தேதி காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா, இரவு 9மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் உலா வருகிறார். 14ஆம் தேதி காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பெரிய திருவடி எனப்படும் கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் உலா வருகிறார்.

15ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறிய திருவடி என போற்றப்படும் அனுமன் வாகனத்தில் வீதி உலா வருகிறார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டமும் இரவு யானை வாகன வீதிஉலாவும் நடைபெறுகிறது.


16 ஆம் தேதி காலை சூர்ய பிரபை வாகன வீதி உலா, இரவு7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. 17ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டமும் இரவு7 மணிக்கு குதிரை வாகன வீதி உலாவும் நடைபெறுகிறது.

18ஆம் தேதி காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம் நிகழ்கிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.



Leave a Comment