திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம்


திருமலை ஏழுமலையான் கோவிலி நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, 18ஆம் தேதி வரை 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்றது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் மலையப்ப சுவாமி காலை, மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலம் வருகிறார்.
இன்றைய தினம் அங்குரார்ப்பணத்தையொட்டி வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.



Leave a Comment