ஸ்ரீ திருத்தளிநாதர் சுவாமி திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருநாள் அபிஷேக ஆராதனை


திருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ திருத்தளிநாதர் சுவாமி திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருநாள் யோக பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ளது புராண சிறப்பு மிக்க மிக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீ திருத்தளி நாதர் சுவாமி திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு யோகா பைரவருக்கு சிறப்பு திருமஞ்சனம் வெகு விமரிசையாக நடைபெற்றன.

 இக்கோவிலில் தனி விமானம் கொண்டு பைரவர் சுவாமி யோக பைரவர் ஆக அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் தேய்பிறை அஷ்டமியை திருநாளை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றன.

முன்னதாக மூலவர் யோக பைரவருக்கு என்னை காப்பு சாற்றி திருமஞ்சனப் பொடி மாவு கரைசல் மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது பின்னர் பைரவருக்கு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு யோகபைரவர் சுவாமியை வழிபட்டனர்.



Leave a Comment