கங்கைகொண்டான் கோயிலில் மகா கும்பாபிஷேகம்


நெல்லை அடுத்துள்ள கங்கைகொண்டானில், அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
மிகப் பழமையான இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக மே 31 ஆம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, 4ஆம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை, மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வாக ஜூன் 1 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு கோயில் விமான கோபுரத்துக்கு மஹா கும்பாபிஷேகமும் காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



Leave a Comment