ஷீரடி சாய்பாபாவுக்கு குடமுழுக்கு....


திருத்தணி அருகே உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலின் நுழைவு வாயில் கோபுரத்தின் மகா குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் தான் குடமுழக்கு விழா நடைபெற்றது. இக்கோயில் முன், புதிதாக நுழைவு வாயில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் குடமுழுக்கு விழா, பாலசுப்பிரமணியர், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகள் ஸ்தபன நவ கலசாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை காலை, 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை, தன பூஜை பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் 3-ஆம் கால யாக பூஜை, இரவு பாபா திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



Leave a Comment