மழை வேண்டி அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம்..... 


மழை வர வேண்டி சென்னை பூந்தமல்லி ஊத்துகாட்டு எல்லை அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன. வருகின்ற கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கு மழை வர வேண்டி ஆங்காங்கே சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு வருகின்றன. 

இந்நிலையில் மழை வர வேண்டி சென்னை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஊத்துகாட்டு எல்லையம்மனுக்கு கோவில் தர்மகர்த்தா ஞானம் தலைமையில் அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடைப்பெற்றது. 

இதில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தலையில் இளநீர் ஏந்தியவாறு  ஊர்வலமாக நடந்து வந்து ஊத்துகாட்டு எல்லையம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்.இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
 



Leave a Comment