அங்காளம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்...


ஆரோவில் அருகே அங்காளம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிேஷகம் உள்ளிட்ட ஆறு வகை அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை உற்வசத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது.

ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி இன்று தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ மிளகாய் பொடி அபிஷேகம் மற்றும்  தயிர், எலும்பிசை,மஞ்சள்,பால், இளநீர், உள்ளிட்ட ஆறு வகையான சிறப்பு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.



Leave a Comment