பெரியபாளையத்தம்மன் கோயில் மகா கும்பபிஷேகம்.... 


சென்னை ராயபுரம் அடுத்த அட்டப்பாடி மீனவ கிராமத்தில் உள்ளது பழமையான   பெரியபாளையத்தம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில்  36 ஆண்டுகள்  கழித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


யாகசாலை வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று   கைலாய வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி   சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர் இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


முன்னதாக கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்   யாகசாலை பூஜையில்  40 நாட்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜகள் நடைபெற்றது  கடந்த  மூன்று நாட்களாக  நடந்து  வந்த யாகசாலை பூஜைகள்  நிறைவு பெற்று நான்காம் காலயாக  பூஜையில்  மஹா பூர்ணாஹீதி நிறைவுபெற்று வேத பாராயணம் முழங்க சிவாச்சாரியார்களால் இராஜகோபுரம் மற்றும் சன்னதி கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 



Leave a Comment