திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி வீதி ஊர்வலம்


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு ஒரு முறை. வீதி ஊர்வலம் வலம் வரும் இரண்டு உற்சவ முர்த்திகள்.

ஆறு படை வீடுeளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் தைப்பூச திருநாளான இன்று திருக்கோயிலின் உபகோயிலான பழனியாண்டவர் திருக்கோயிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தைபூச சிறப்பு நிகழ்வாக பழனியாண்டவர் சன்னதி உற்சவர் முருகன் தெய்வானையுடனும், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி உற்சவர் சுப்பிரமணியர் - தெய்வானை ஆகிய இரு உற்சவர்களும் இணைந்து கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் ஸ்வாமி வீதி உலா வருவது மிகவும் சிறப்பான நிகழ்வாகும் அதுவும் ஆண்டுக்கு  ஒரு முறை இரு உற்சவர்.  வீதி உலா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
 



Leave a Comment