திருச்சானூரில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் டிசம்பர் மாதம் 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 8-ந்தேதி கஜவாகனம், 9-ந் தேதி தங்கதேரோட்டம், கருடவாகனம், 11- ரதஉற்சவம், 12-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

பிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்களை கவரும் விதமாக திருப்பதியில் கண்காட்சி விளம்பரங்களும் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்புக்கு 300 ஸ்ரீவாரி சேவகர்களும் விஜிலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து சேவைபுரிய உள்ளனர்.

 



Leave a Comment