குரு பெயர்ச்சி... தங்கத்தின் மதிப்பு உயருமா?


பொது பலன்கள்:
பொதுவாக விருச்சிக ராசி என்பது வேகமாக செய்யக்கூடிய காரியங்கள் மற்றும் பூமி சம்பந்தபட்ட காரியங்களை குறிக்கக்கூடிய ராசியாகும். இதன் அதிபதி பூமி காரகனாகிய செவ்வாய் ஆவார். வேகம் - பூமி - வீடு - மனை - வயல் - வாகனம் - ராணுவம் - காவல் ஆகிய விஷயங்களுக்கு செவ்வாயே அதிபதியாவார். அதே போல் மங்களகாரியங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கும் செவ்வாய் முக்கியமானவர் ஆவார்.

மங்களகாரகன் செவ்வாய் தேவகுரு குருபகவானுடன் இணையும் போது நல்ல பலன்களை அள்ளித் தருவார். ஜோதிடத்தில் இதற்குப் பெயர் குரு மங்கள யோகம் என்று அழைக்கப்படும்.

நாடு மற்றும் பொருளாதாரம்:
செவ்வாய் வீட்டிற்கு குரு மாறுவதால் ரியல் எஸ்டேட் நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.

விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு விருச்சிகம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் முன்னேற்றும். சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர்.

உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். குரு சாரத்தில் மாறுவதால் மங்கள காரியங்கள் மிக அதிக அளவில் நடைபெறும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும்.

பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.



Leave a Comment