எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா


நெல்லை அருகே உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 2-ந்தேதி நடக்கிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று காலையில் கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

மாலையில் கோபாலகிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான திண் பண்டங்கள் படைக்கப்படுகின்றன. இந்த பண்டங்கள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி 12 ஆயிரத்து 8 பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. இதற்காக அந்த பானைகள், கலயங்களில் வண்ணம் பூசப்பட்டு கிருஷ்ணன், சிவன் மற்றும் சாமி படங்கள் வரையப்பட்டு வருகிறது.



Leave a Comment