ராகவேந்திரர் கோயிலில் மகோத்சவ விழா!


திருக்காட்டுப்பள்ளி கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ராகவேந்திரரின் ஆராதனை விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் ராகவேந்திர சுவாமியின் ஆராதனை, கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடந்தது. விழாவில் அப்புராவ், பீமசந்திரன், பங்குனி உத்திர கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ராம.மகாதேவன், ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரன், ஜெயகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோல் திருக்காட்டுப்பள்ளி ராயர் அக்ரஹாரம் ராகவேந்திர சுவாமிகள் மிருத்திகா பிருந்தாவனத்தில் சுவாமிக்கு நேற்று முன்தினம் அபிஷேக, ஆராதனை நடந்தது.

நேற்று காலை நடந்த மத்திய ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்து வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சை நகரின் மணிமுத்தா நதி எனப்படும் வடவாற்றின் தென்கரையில் வடக்குவாசல் அருகே மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனத்தில் நேற்று முன்தினம் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் 347வது ஆராதனை மகோத்சம் விழா துவங்கியது. இந்த விழா இன்று வரை நடக்கிறது.



Leave a Comment