அமராவதியில் ஒரு திருப்பதி !


ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் ரூ.150 கோடி செலவில் புதிய ஏழுமலையான் கோவில் கட்டப்படவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலையில் உள்ள கோவர்த்தன சத்திரம் அருகில் புதிய ஓய்வறைகளைக் கட்ட ரூ.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து துறையில் பணிபுரியும் அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கான மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் திருமலையில் உள்ள துரித உணவகங்கள், தேநீர் விடுதிகள், சிற்றுண்டி விடுதிகள் உள்ளிட்டவற்றில் உணவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபங்களை செப்பனியிடவும், வளர்ச்சி பணிகளுக்காகவும் ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Leave a Comment