விரும்பும் துறையில் வேலை கிடைக்க...


ஸ்ரீதேவி...

அம்ருதோத்பூதா கமலா சந்த்ரசோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச வராரோஹாங்க சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவ தேவீ மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ
ஸ்ரீ மஹாலக்ஷ்மி துதி


இந்தத் துதியை மஹாலக்ஷ்மி படத்தின் முன் அமர்ந்து விளக்கேற்றி, தினமும் 16 முறை பாராயணம் செய்து வர தேவியின் அருளால் அவரவருக்குப் பிடித்தமான துறையில் நல்ல வேலை கிடைக்கும்.


பொதுப்பொருள்:
செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதையானவளே. அமிர்தம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது திருப்பாற்கடலில் தோன்றியவளே, தாமரை மலரை விரும்பி ஏற்பவளே, சந்திரனுக்கு சகோதரியே, திருமாலின் மனைவியே, வைஷ்ணவியாய் அருள்பவளே, பக்தர்களின் நல் வாழ்வில் ஏற்படும் தடைகளை உன் கையில் உள்ள சார்ங்கம் எனும் வில்லால் அழிப்பவளே, தேவர்களுக்கெல்லாம் தேவியே, மஹாலக்ஷ்மியாய் பேரழகுக் கோலத்தில் திகழ்பவளே, உன்னை வணங்குகிறேன்.



Leave a Comment