காவல் தெய்வம் காமாட்சி


அம்மனின் 51 சக்தி பீடங்களில் காமகோடி சக்தி பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாட்சியம்மன் ஆலயமாகும். தங்கக் கோபுரத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில்தான் ஆதிசங்கரர், ஆனந்தலஹரி பாடினார். தல விருட்சமாக செண்பக மரமும், தல தீர்த்தமாக பஞ்ச கங்கையும் உள்ளன. அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யம் கொழிக்கும் வாழ்வும், மனநிம்மதியும் ஏற்படுகின்றன. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவையும் இங்கு வரும் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனைகள். அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சமடைந்திருப்பதால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் விலகிவிடுகின்றன. குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



Leave a Comment