வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்


கோவை அருகே பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலையில் வேள்வி, சிறப்பு பூஜை அபிஷேகம், சுவாமி திருவீதி உலா மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் நடந்த்து.
தொடர்த்து விழாவின் 6ம் நாளான நேற்றுக் காலை மணிக்கு நாடராஜர் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தரிசனக்காட்சி நடைபெற்றது. மாலையில் வெள்ளிங்கரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஆதிவாசிகள் நடனம்,தாரைதப்பட்டை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைநிகழச்சிகளும்,பால்காவடி,பன்னீர் காவடி,புஷ்பகாவடி ஆட்டம் நடைப்பெற்றது. தொடர்ந்து மாலை 5.50 மணிக்கு பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகளார் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அரோகரா என பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



Leave a Comment