வயலூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா


அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த வயலூர் முருகன் கோயிலில் தைப்பூசதிருவிழா கோலாகலம் கொண்டாடப்பட்டது. திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமானதும், ஆன்மீக அடிகளார் எனப்படும் கிருபானந்தவாரியாருக்கு அருள்புரிந்து ஞானம் அளித்த வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அறுபடைவீடுகளில் சென்று வழிபட இயலாத பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தாலே அறுபடை பெருமானை தரிசனம் செய்த பாக்கியம் கிட்டும் என்பதால், தைப்பூச திருநாளில் திருச்சி வயலூர் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி வெள்ளி அங்கியுடன், வெள்ளி கேடயத்தில் எழுந்தருளினார் பின்மகாதீபாராதனைகள் நடைபெற்றது. பிற்பகல் அதவத்தூர் தீர்த்தக்குளத்திற்கு வீதிஉலாவும் பின்னர் தீர்த்தவாரியும் நடைபெற்றது.



Leave a Comment