திருச்செந்தூர் மாசித் திருவிழா....


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் பிப். 2-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி, மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பிப். 2-ம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், அவரது அலுவலகத்தில் உள்ள சிப்பி கூடத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேவையான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment