திருப்பதி கோயிலில் லட்டு விலை இருமடங்கானது....   


திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கும், வி.ஐ.பி.க்களுக்கும், பரிந்துரை கடிதங்கள் மூலம் தினந்தோறும் லட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. லட்டு தயாரிப்பதற்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் கூடுதல் லட்டு விலையை தேவஸ்தானம் இருமடங்காக இன்று முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளது. சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய லட்டு விலை ரூ.25ல் இருந்து ரூ.50 ஆகவும், பெரிய லட்டு விலை ரூ.100ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. சிபாரிசு கடிதத்துக்கு தரப்படும் சிறிய வடையின் விலையும் ரூ.25ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத லட்டு விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. 



Leave a Comment