யானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் அசைந்தாடி வந்த முருகன்... கண்கொள்ளா காட்சி...


புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது  ஸ்ரீ முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி திருக்கோவில் . இந்த திருக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவு பல்வேறு வாகன சேவை நடைபெற்று வருகின்றது.

இதனையொட்டி முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில்  யானை வாகனத்தில்  எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டு சென்றனர்.



Leave a Comment