ஜம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்... யானை மீது வந்த புனித நீர் கலசம்...


தஞ்சை மாவட்டம் காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி புனித நீர் கலசம் யானை மீது வைக்கப்பட்டு,  தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன் 18 கிராமங்களை சேர்ந்த இரண்டாயிரம் பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் 18 கிராமங்களை உள்ளடக்கிய கிராமங்கள் காசவளநாடு என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள கோவிலூர் என்ற கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் மிகவும் பழமையானதாகும்

இக்கோவில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. இதனையொட்டி, கோவில் திருப்பணிகள் 18 கிராமங்களை சேர்ந்த மக்களால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து முடிந்துள்ளது.

கும்பாபிஷேகம் 7ம் தேதி நடைபெற உள்ளதை ஒட்டி, இன்று யாகசாலை பூஜை துவங்கியது இதனை முன்னிட்டு, கல்லணை கால்வாய் ஆற்றில் இருந்து புனித நீர் கலசம் யானை மீது வைக்கப்பட்டு யாகசாலை மண்டபததிற்கு கொண்டு வரப்பட்டன.

பெண்கள் கோலாட்டம், கொம்பு இசை, தப்பாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன் 18 கிராமங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பெண்கள் முனைப்பாரி சுமந்து வான வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.



Leave a Comment