ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மாசிமாத பொங்கல் பூச்சாட்டு திருவிழா!


திருப்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மாசிமாத பொங்கல் பூச்சாட்டு திருவிழா!ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்த்திக்கடன்!!ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாவித்தார்.

திருப்பூர் தாராபுரம் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் வருடாவருடம் மாசிமாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் பொங்கல் திருவிழா கடந்த வாரம் 13 ம் தேதி செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுடன் துவங்கியது.

அதனை தொடர்ந்து நேற்று இரவு பார்க் சாலையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோவிலில் இருந்து கம்பம் எடுத்து வரப்பட்டு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் முன்பு நடப்பட்டது.அதனை தொடர்ந்து தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள் விரதம் இருந்து பழைய பேருந்து நிலையம்,ஷரீப் காலனி,ஆகிய பகுதிகளில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் இருந்து வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கையில் தீச்சட்டி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று தாராபுரம் சாலையில் உள்ள ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து ஸ்ரீ கோட்டை மாரியம்மனுக்கு ஆதிபராசக்தி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.இந்த பூச்சாட்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரியவர்களும்,சிறியவர்களுக்கு பூச்சட்டி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.



Leave a Comment