சிம்ம வாகனத்தில் யோக நரசிம்ம அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்த மலையப்பசாமி


திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பு கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.

பிரம்மசாத்தை ஒட்டி பல்வேறு வாகன சேவைகள் திருமலை மாட வீதிகளில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி யோக நரசிம்ம அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வாகன மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையைத் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து தேவஸ்தான ஜீயர்  சுவாமிகள் தலைமையில் கோஷ்டி பிரபந்த பாசுரங்கள்  சொல்லியபடி முன் செல்ல உயர் அதிகாரிகள் ஆங்காங்கே ஆரத்தி அளித்து சுவாமி அருள் பெற்றனர் தொடர்ந்து மாடவீதி முழுவதும் பல்வேறு கலைஞர்கள் தங்களது கலையை சுவாமிக்கு சமர்ப்பித்துச் சென்றனர்.

மேலும் ஒரு குழுவினர் நரசிம்மர் வேடமணிந்து மாட வீதிகளில் வலம் வந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது மாட வீதி முழுவதும் கோவிந்த நாமம் சொல்லியபடி பக்தர்கள் ஆரத்தி அளித்து மலையப்ப சுவாமியை வணங்கினர்.



Leave a Comment