திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் தெப்போற்சவம்....


திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் தெப்ப உற்சவத்தின் நான்காம் நாள் ஆன இன்று இரவு உற்சவர், ஆண்டாள் சமேதராக கிருஷ்ணர் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 ஐந்து நாட்கள் நடக்கும் தெப்போற்சவத்தின் நான்காம் நாளான இன்று உற்சவர் கிருஷ்ண அலங்காரத்தில் ஆண்டாள் சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருக்குளத்தை அடைந்தார்.

தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளிய உச்சவர்கள் தெப்போற்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிந்தராஜரின் தெப்போற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.



Leave a Comment