ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா...


கிருஷ்ணகிரியில் உள்ள கிட்டம்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி வட்டம், கிட்டம்பட்டியில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் குண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு ஜீர்ணோதாரன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.   

இன்று காலை அம்மன் மூல மந்திர ஜெப ஹோமத்துடன் துவங்கிய விழா, 108 மூலிகை யாகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மனுக்கு 108 மூலிகை நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் கிட்டம்பட்டி, அவதானப்பட்டி, அகசிப்பள்ளி, மோட்டூர், கனகமுட்லு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் க்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment