16 அடி உயர லட்சுமி நரசிம்மருக்கு 10 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற அபிஷேகம்...


புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவில் வளாகத்தின் அருகே  அமைந்துள்ள  16 அடி உயர லட்சுமி நரசிம்மன் ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 10 மணி நேர தொடர் அபிஷேகம் நடைபெற்றது.

இதில் 108 கிலோ சந்தனம், விபூதி மற்றும் 108 லிட்டர் தேன், தயிர், பால் மற்றும் கரும்புச்சாறு இளநீர் உட்பட பல்வேறு பூஜை பொருட்களைக் கொண்டு காலை 6:00 மணிக்கு துவங்கிய அபிஷேகம் மாலை 5 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து பத்து மணி நேரம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தால் சகல விதமான நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment