திருமணத் தடை நீக்கும் உத்திரகோசமங்கை


சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணியத் தலங்களில் ஒன்று உத்திரகோசமங்கை திருத்தலம். ‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள். உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது. இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது. மங்களநாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும். மங்களேஸ்வரி அம்பாளுக்கு நான்கு திருக்கரங்கள். இந்த அம்மனை ஐந்து செவ்வாய்க்கிழமைகள் ராகுகால வேளையில், எலுமிச்சை பழ தீபமேற்றி, ஒன்பது எலுமிச்சைப் பழங்களை உதிரியாக அன்னையின் காலடியில் சமர்ப்பித்து வந்தால், செவ்வாய்தோஷம் நிவர்த்தி ஆகும். திருமணத் தடை அகலும்.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் பரமக்குடி, சத்திரக்குடி ஊர்களைத் தாண்டினால் வலதுபுறத்தில் தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலை வரும். இந்த சாலையில்தான் உத்திரகோசமங்கை திருத்தலம் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.



Leave a Comment