மலேசியா பத்துமலை முருகன் கோவில்... புதிய தோற்றம்....


அறுபடை வீடுகளைப் போன்று, தமிழகத்திற்கு வெளியே பிரசித்தி பெற்ற முருக தலமாக விளங்குவது மலேசியா பத்துமலை முருகன் கோவில். இக் கோவிலின் புணருத்தாரண மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இக் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டனர். இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சாஸ்த்திரோத்தமான கும்பாபிஷேகமாக இருந்த போதும், சமூக வலைத்தளங்களில் இக்கும்பாபிஷேகம் குறித்து, அதிகமான செய்திப் பகிர்வுகள் காரணமாக, அதிகளவிலான மக்கள் குவிந்ததாகவும் தெரிய வருகிறது. அதற்குச் சிறப்பான காரணம் உண்டு.

மலைமீதுள்ள குகையில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்திற்குச் செல்லவதற்குரிய பாதையில் அமைந்துள்ள 272 படிகளையும், வானவில்லின் ஏழுவர்ணங்களையும் கொண்ட நிறங்களால் புதிதாக வர்ணம் தீட்டியுள்ளார்கள். இது பார்பவர்கள் மனதை கவர்வதாகவும், குறிப்பாக இளையவர்கள் அதன் அழகை இரசித்துப் படங்கள் எடுத்துப் பகிர்வதனால், சமூக வலைத்தளங்களில் அதிக பிரசித்தம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.

முருக பக்தித் தலமாக அமைந்த போதும், உலகின் மிகப்பெரிய முருகன் சிலை அமைந்ததினால், சுற்றுலாப் பயணிகளின் கவணத் பெற்றிருந்த பத்துமலைத் தலம், இப்போது புதுவர்ணத் தீட்டலாலும் சுற்றுலாப் பயணிகளினதும், இளையவர்களினதும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. பல் வர்ணக் காட்சியால் உலகப் புகழ்பெற்றது மிதக்கும் நகரமான வெனீசின் புறானோ தீவு. வருடந்தோறும் அதன் அழகைக் கண்டு மகிழப் பலலட்சம் மக்கள் அத் தீவிற்குப் பயணிக்கின்றார்கள்.



Leave a Comment