பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை


திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில் இன்று (16-07-2018)  வேங்கட கிருஷ்ணர் மூலவருக்கு திருமஞ்சன சேவை நடைபெறுகிறது. 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவிலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இத்திருத்தலத்தில் எம்பெருமான் மகாபாராதப் போரின்போது  பார்த்தனுக்கு தேரோட்டிய சாரதி வடிவில் காட்சியளிக்கிறார்.

மேலும் இத்திருத்தலத்தில் திருமாலின் ஐந்து அவதாரங்களான நரசிம்மர், ராமர், வரதராஐர், ரங்கநாதர், மற்றும் கிருஷ்ணராக பெருமாள் அருள்பாலிக்கிறார். மேலும். இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகியோர்சன்னதிகள் உள்ளன மேலும் இத்திருக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் இடம்பெற்றுள்ளன.  இங்குள்ள யோக நரசிம்மருக்கு காலையில் முதல் பூஜை நடைபெறுகிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்பது இத்திருத்தலத்தின் ஐதீகம். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு பிரார்த்தனை செய்து பெருமாளை வணங்கினால் தீராத நோய்கள் விலகும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்புமிக்க இத்திருத்தலத்தின் மூலவரான வேங்கட கிருஷ்ணருக்கு இன்று (16-07-2018) திருமஞ்சன சேவை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்பெருமானின் அருளைப்பெறுவதற்கு ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்துள்ளனர்.



Leave a Comment