அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள்


 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

 பிருத்வி தலம் நிலம்

 

பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்று புகழப்படும் சிறப்பினை உடையது இத்திருத்தலம் .  மிகவும் பிரம்மாண்டமாக  33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள  இக்கோயில்,  9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் , 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் கொண்டு புகழ்பெற்று விளங்குகிறது  . ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

 

நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம் மற்றும்  நட்பின் முக்கியத்தை உணர்த்த , சுந்தரருக்காக , சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம் என ஏகப்பட்ட சிறப்புகளுக்கு சொந்தமான இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. வான்மீகிநாதர் ,மற்றும் தியாகராஜர் என சிவபெருமானுக்கு இரண்டு திருநாமங்கள். மிகவும் பழமையான வான்மீகி நாதர் சந்நிதியில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதால் புற்றிடங் கொண்ட நாதர் என்று வழங்கப்படுகிறார்.

இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலும் பஞ்ச பூத தலங்களில் நிலத்துக்கான ஒன்றாக கருதப்படுகிறது .



Leave a Comment