பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா....


பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா மே 8-ந் தேதி தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது. முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில், ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர கழு திருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மூலவரான ஞான தண்டாயுதபாணி நவபாசான திருமேனியில் காட்சியளிக்கிறார். கடும் கோடை காலங்களில் மூலவரை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி ஆற்றிலிருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இதில் கடும் கோடை காலமான அக்னி நட்சத்திர கழு நாட்கள், சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் ஆகும். இதையே பழனி கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் பூமியின் மீது சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக விழுவதால் பூமியில் வெப்பம் பன்மடங்கு அதிகமாகிறது. இந்த கடும் கோடை வெப்பம் அனைத்து உயிரினங்களையும் பாதிக்காமல் தடுக்கவும், உயிரினங்கள் நோய் நொடியின்றி வாழவும் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதகும்பம் வைத்து குளிர வைக்கும் நிகழ்ச்சி தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.



Leave a Comment