மேல்மருவத்தூரில் சித்ரா பௌர்ணமி திருவிழா....


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா மே 9, 10 ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட வளாகம் வண்ண மின் விளக்குகள், பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
முதல் நாளாள மே 9 அன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். கருவறை அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு சித்தர்பீடம் வரும் பங்காரு அடிகளாருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மறுநாள் புதன்கிழமை மே 10 மாலை 4.15 மணிக்கு சிறப்பு கலச, விளக்கு, வேள்வி பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த வேள்வி பூஜைக்கு 1000-க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவங்களில் யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்ட சக்தி பீடங்கள் மற்றும் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.



Leave a Comment