திருநின்றவூர் பக்தவஸ்தல பெருமாள் கோயில் கருடசேவை...


108 திவ்ய தேசங்களில் 58 வது திவ்யதேசமான திருநின்றவூர் அருள்மிகு பக்தவஸ்தல பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கருடசேவை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தவஸ்தல பெருமாள் கோயிலிலி கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி நம்மாழ்வார் பரங்கி நாற்காலி, ஆளும் பல்லக்கு, புன்னை மரவாகனம் மற்றும் திருப்புளி வாகனத்தில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வலம் வந்தார். 5ம்திருநாளான மார்ச் 18 ஆம் தேதி காலை கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கருடசேவைநிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 21ம்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.



Leave a Comment