திருப்பதியில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி...


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமலையில், 16-ஆம் நூற்றாண்டில் அன்னமாச்சாரியாவின் பெரிய மகனான திருமலைசாரியார் கார்த்திகை மாத வனபோஜனத்தை நடத்தியதாக வரலாறு உண்டு.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட அந்த உற்சவத்தை, தேவஸ்தானம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட வனபோஜன நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வனபோஜன நிகழ்ச்சியை ஒட்டி, வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை போன்றவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment