திருப்பதியில் கார்த்திகை வனபோஜன உற்சவம்


திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நவம்பர் 20 ஆம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளது.
மதியம் 1 மணியில் இருந்து 3 மணிவரை பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்கிறது.
அதையொட்டி உற்சவர் மலையப்பசாமியை சிறிய கஜ வாகனத்தில் வைத்தும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கு வாகனத்தில் வைத்தும் கோவிலில் இருந்து ஊர்வலம் நடைபெறுகிறது.
தொடர்ந்து பார்வேடு மண்டபத்தில் வைத்து உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.



Leave a Comment