திருப்பதி தங்க தேர் ஊர்வலம்....


திருப்பதி வெங்கடேஸவரா கோவிலை சுற்றி வரும் நவராத்திரி பிரம்மோத்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேர் ஊர்வலம் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.

இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் என கோவில் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனுடன் பாரம்பரிய அலங்காரத்துடன் கூடிய தேரில் பல்வேறு ரத்தினங்கள் பதித்த ஆபரணங்களுடன் வெங்கடேஸ்வரா மற்றும் அவரது இரு பக்கமும் ஸ்ரீ லட்சுமி மற்றும் ஸ்ரீ பத்மாவதி ஆகியோரின் பழைமையான சிலைகள் இடம் பெற்றிருந்தன.

நீண்ட கயிறுகள் கட்டப்பட்ட 32 அடி உயர தேரினை பக்தர்கள் இழுத்தனர்.



Leave a Comment